Saturday 4th of May 2024 04:37:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜேர்மனியில் கோவிட்19 கட்டுப்பாடு ஏப்ரல்-18 வரை நீடிக்க  உத்தரவு!

ஜேர்மனியில் கோவிட்19 கட்டுப்பாடு ஏப்ரல்-18 வரை நீடிக்க உத்தரவு!


ஜேர்மனியில் அமுலில் உள்ள கோவிட்19 கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18-ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கோவிட்19 தொற்று நோயின் மூன்றாவது அலை ஆபத்து அதிகம் இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஈஸ்ரர் பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடலாம் என்பதால் இக்காலப் பகுதியிலும் கடுமையாக சமூக முடக்கல் உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இதுவரை 26 இலட்சத்து 60 ஆயிரம் வரையானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 74,664 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

புதிய திரிவு வைரஸ் ஜேர்மனி உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையிலேயே 3-ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து ஜேர்மனிய அரசு ஆலோசித்து வந்தது. இது தொடர்பாக மாகாண ஆளுநர்களுடன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது கோவிட் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஏப்ரல் 18 வரை நீடிக்க தீா்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE